Sunday 15 July 2012

நிலவு முளைத்தது

தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு துவாரத்தின் வழி வருகின்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகங்களை சரியாக தெரியவில்லை. இவன் நிமலன்.... அவன் பார்த்திபன்.... அந்த மூலையில் கிடப்பவன் திலகன். வந்த சில நாட்களுக்குள் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறான். அவர்கள் உண்மையிலேயே குற்றம் செய்தவர்களா? சந்தேகத்தின் பேரில் கைதாக இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் தானா? வுpசாரிக்கும் துணிச்சல் இன்னும் வரவில்லை. பொலிஸ்காரர்களைப் பற்றிய பயம் அதிகரித்திருந்தது. ~~எங்கட காலத்தில் செகண்ட்ஷோ பார்த்திட்டு வரேக்க லைட் இல்லாட்டி, டபிள் வந்தால்.... பிடிக்கிற பொலிசாரிட்ட ஐந்து ரூபாவை இழக்கிவிட்டால் போதும். சிலவேளை கோர்ட்டிலிருந்து சமன்ஸ் வந்தாலும் ஏய்ப்புக் காட்டலாம்.... இப்ப முடியாது. அப்பா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. உண்மைதான். முற்றத்தில் சாய்மனைக்கதிரைகளில் சாய்ந்தபடி சுருட்டு குடிக்கிற தைரியம் அப்பாவுக்கு இல்லவே இல்லை. திறந்திருந்த தலைவாசலும் மூடி அறையாக்கி விட்டார்கள். வெளிவிறாந்தையில் சீலைத்தலைப்பை விரித்து தூங்கும் அம்மாவும் தங்கைகளுடன் அறைக்குள்ளேயே பாயை விரித்;துபடுகிறாள். நாய் குரைத்தால் கள்ளர் பயம் அல்லது ஆமிபோகுது என விளக்கை அணைத்துவிடும் கொடூரம்.... நோயாகவே மாறியிருந்தது. கிராமத்து மக்கள் வீரம்மிக்கவர்கள் என்கிற நாட்கள் மலைஏறிவிட்டது. பெருமூச்சுவிட்டபடி எழுந்து அங்கும் இங்கும் நடந்தான். நேரம் என்ன இருக்கும்? கைதிகளாகிக் போனவர்களின் நேரம் சரியில்லாததினால் தானே இங்கு அடைபட்டு இருக்கிறோம். மணிக்கூடு கட்டாத காலங்களில் ~அண்ணை நேரம் என்ன?| என்று சைக்கிளில் போபவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். புதில் சொல்லாமல் போபவரின் சைக்கிலுக்கு சந்தையில் வைத்து காற்றைத் திறந்து விடலாம். குறும்புகளின் காலம் செத்துவிட்டது. உடம்பு வலி எடுத்தது. ஊரில் என்றால் அம்மா நோ எண்ணை போட்டுவிடுவாள். பந்தடிக்கப்போய் விழுந்தெழும்பி காயப்பட்ட வந்தபோது வேப்பெண்ணையை காய்ச்சி உடம்பெல்லாம் தடவிவிட்டாளே அம்மா. அக்கா திட்டுவாள்.... ~அண்ணையை பேசாதே| என்று அக்காவை அதட்டும் தங்கை பாசம் பொழிந்த நாட்கள்.... ~~கண்டிப்புக்கு அப்பாதான்|| தங்கைகள் தவறு செய்தாலும் தண்டனை தனக்குத்தான் எதிர்பார்க்கலாம். ~~பொடியனுக்கு அடிச்சால் பொடிச்சிகள் தானாய் திருந்தும் அப்பாவின் வாதம்|| மறந்தும் அம்மாவிற்கு கை நீட்டியது. கண்டிப்புக்கு குறைவில்லை. அவரின் ஒரு உறுமல் போதும். மூலையில் கிடந்தவன் புரண்டு கொண்டிருந்தான். அவனுக்கும் தூக்கம் வரவில்லையோ? அவனுக்கும் உடம்பு வலி கண்டிருக்குமோ? பசி வாட்டுமோ?? வீட்டு ஞாபகம் வந்து அரித்திருக்குமோ??? அவர்கள் செய்த தவறு தான் என்ன? அரச பாசையில் தமிழர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்.... புலிகள்.... தமிழர்கள் மனிதர்கள் அல்லது என்றுதானோ? இன்றுடன் அவன் வந்து பதினான்கு நாட்கள் ஓடி விட்டன. பசித்தது. ~~அம்மா இடியப்பமும் சொதியும் தருவா.... இண்டைக்கு வியாழக்கிழமை. அம்மா அப்பம் சுடுவா? நாளைக்கு விரதம்.... வாழை இலையில நாலைந்த கறிகளோட சாப்பிடலாம். நினைக்க மூச்சு முட்டியது. காய்ந்த பாண் புளுப்பிடித்திருக்கும்.... புளித்து மணக்கிற பருப்புக்கறி.... வயித்தைக் குமட்டும். மூத்திர நெடி.... ஆஸ்த்மா நோயாளியான திலகன் காறித் துப்பும்.... சுகாதார வாரம் நாட்டில் கொண்டாடப்படும் நாட்களில் கூட இங்கு சுகாதாரம் பேணப்படுவதில்லை. இங்கு வந்தவர்களின் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஒன்றில் சுகாதார வசதியீனங்களினால் அல்லது அடித்தே கொன்று விடுவர். வெலிக்கடைச் சிறைத்தாக்குதலுக்குப் பிறகு.... இங்கும் அந்தப்பயம் அதிகரித்துள்ளது. அந்த முறுக்கு மீசைக்காரன் சிறைக்காவலன் என்ற பேரில் நின்றான். பார்ப்பதற்கு ரவுடி மாதிரி தோற்றம் தந்தான். இவர்களிடம் அன்பை எதிர்பார்க்க முடியுமா? நாலு நாட்களுக்கு முன்னரும் பக்கத்து அறையில் ரவுடிகளினால் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.... பயம் மேலும் அதிகரித்தது. நாலைந்து ரவுடிகள்.... சிவந்த விழிகளுடன்.... கைகளில் இரும்புச் சங்கிலி, சுருள்வாள் தடிகளுடன் வந்து தாக்குவதாகக் கனவு வருகிறது. பகல் கனவு பலிக்காதாம்....இரவிலும் வருகிறதே. கொழும்புக்கு வந்து ஏஜன்ஸியிடம் பாஸ்போட்டையும் பணத்தையும் கொடுத்துவிட்டு லொட்ஜில் வந்து தங்கினான். ~~அடுத்த கிழமை சிங்கப்ப+ர் போய் அங்கயிருந்து பிரான்ஸிற்கு போகலாம்|| ஏஜன்ஸி சொல்லியிருந்தான். பொலிஸ் பதிவுடன் தான் அங்கிருந்து எங்கும் உலாவ முடியும். முந்தியும் பொலிஸ் கைது செய்தபோது இருபத்தையாயிரம் கொடுத்துதான் வெளியில் எடுத்தது ஞாபகம் வர நெஞ்சில் வாள் கொண்டு ஏதோ அறுபடுவது மாதிரி இருந்தது. தங்கச்சிக்கு எண்டு வைத்திருந்த பாணியை அறாவிலைக்கு விற்று வந்து பாஸ் எடுத்து வவுனியாவில் தமிழ்க் குழுக்களிடமிருந்து தப்பி கொழும்புக்கு வந்தால் தமிழ் பேசினால், தமிழன் என்றால்.... வதைபட வேண்டி வரும் என்பது தெரிந்தது. ~~அண்ணை இஞ்ச இருந்தால் எங்களையும் பிடிச்சுப் போவாங்கள்|| தங்கை கண்ணீருடன் நின்றாள். வயலுக்குள்ள உழுது கொண்டிருந்த கணவனை ஆமிசுட்டு பிணமாக கொண்டு வந்து தலைவாசலுக்குள் கிடத்தி.... அழுது குழறி கிரியைகள் முடித்து.... அக்காவிட்டை தாலியைக் கழற்றி வையுங்கோ.... இந்த வெள்ளைப் பிடவையைக் கட்டிக் கொண்டு வாங்கோ| என்று ஐயர் சொல்ல அக்காவுடன் நாம் அழுத அழுகை.... செம்மணியில் எரித்துவிட்டு வருகையில்.... ஆமி வெருட்டியதுதான்.... அந்தியட்டிக்கு முதல் அக்காவும் ~~தம்பி போடா....|| என்று கலைத்தாள். அக்காவின் அழுகை நிரந்தரமானதா? அம்மா மட்டும் அழாமல் இருந்தாளா? ஓவ்வொரு சந்தியிலும் இருக்கிற ஆமிக்காம்ப்படியால தன் மகள் தப்பி தப்பி வரவேணுமே.... கிருஷாந்தி மாதிரி.... மடியில் நெருப்பை சுமந்து வாழுவதாக நினைத்தான். அன்றும் அப்படித்தான். இரவு ஒரு மணிக்கு வந்த கதவைத் தட்டிறார்கள். ஐ.டி யுடன் கீழே வரட்டாம். பொலிஸ் வந்திருக்குது. ரூம் பையன் வந்து சொன்னான். உடல் பதறியது. இண்டைக்குச் சரி.... உயிர் உடலிலிருந்து தப்பி ஓடி பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறதோ? உடல் குளிர்ந்தது பயத்தினால். பியசேனா என்கிற பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்தார். அங்காங்கு மூலைக்கொருவராய் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நின்றிருந்தனர். கண்கள் இருட்டி வந்தது. ~~இண்டைக்கு தொலைந்தோம். மனம் அடித்துக் கொண்டது. லொட்ஜின் மனேஜர் பவ்யமாக கைகூட்டியபடி நின்றதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. வரிசையாக அந்த நடுச்சாமத்தில் நடத்தியே அருகிலிருந்த பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் வரை வயிற்றுக்கு ஒன்றமில்லை. வுயிறு பிறாண்டியது. நாவறண்டது. நாக்கினால் உதட்டை ஈரப்படுத்தியபடி இருந்தான். யாரோ கம்பிக்கதவ+டே சோடாவைக் கொடுத்ததை உள்ளிருந்த ஒருவன் ஸ்ரோவினால் உறிஞ்சினான். இவனைப் பார்க்க பரிதாபமாக இருந்திருக்க வேண்டும். ~வேணுமே!| அறையின் மூத்திர மணம் மூக்கைத்துளைத்து.... குமட்டியது. ~ம்| என்று அருகே சென்று ஸ்ரோ மூலம் உறிஞ்சி குடித்தான். அவன் விழிகள் நன்றியுடன் நோக்கின. கான்ஸ்டபிள் மூலம் ஒரு லட்சம் தந்தால் விட்டுவிடுவதாகவும் இல்லை எனில் புலி என களுத்துறைக்கு அனுப்பிவிடப் போவதாக கெஞ்சல் மரட்டலாக வந்தது. கை வெறுமையென கடித்தது. ஐந்தாம் நாள் யாவரும் லட்சம் கொடுத்து வெளியேற இவன் மட்டும் புலி என குற்றம் சாட்டப்பட்டான். இடுப்பு வலிக்க, எழுந்து உட்கார்ந்தான். வெளியிலிருந்து ~ஐயோ அம்மா| என்று கூக்குரல் எழுந்து மடிந்தது.... பல குரல்கள் ஆவேசத்துடன் பேசியதும் கேட்டது. சிங்களத்தில் பேசியதால் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை. யாரோ வதைபடுகிறார்கள் என்று புரிந்தது. அப்பா சொல்லித்தந்ததிலிருந்து ~தெமிலுபல்லா| தெரிந்தது. கரியா, வேசிக்கே புத்தா.... கொட்டியாதமாய.... ஏன்று கொழும்பில் நின்றபோது பிடிபட்டது தெரிந்தது. அவ்வளவுதான். சாப்பாட்டுத்தட்டை ஒருவன் எறிந்து விட்டுப்போனான். ~~எங்கட வீட்டு நாய்க்குக்கூட பால் வார்ப்போம். அப்பா அடிக்கடி அதன் சட்டியை சழுவிவைப்பார்.... பாவம் வாயில்லா ஜீவன் என்று செல்லமாக வளர்த்தார். அம்மா சோறு வைப்பாள். நானும் என் பங்குக்கு திண்டமிந்ந சோற்றை வைப்பதுண்டு|| இப்போது- வயிற்றைக் குமட்டியது.வெளியே எழுந்து மடிந்த குரல் மனதை உலுக்கியது. இறந்திருப்பாரோ?. அறையை துளாவினான். நேற்றிரவு இழுத்துப் போன ஆஸ்மா நோயாளியானவன் இன்னும் வரவில்லை. ஏன்ன நடந்ததோ? மனது பதைபதைத்தது. வெளிவெளிச்சம் உள்புகாதபடி அந்த அறை கட்டப்பட்டிருந்தது. அதனால் நேரமும் பிடிபடவில்லை. வெளியே இரவா நிலா என்பதும் தெரியவாய்பில்லை. பத்துமணி இருக்குமோ? ஒவ்வொரு இடங்களிலிருந்தும் கைதாகிற தமிழர்கள் இப்படி சிறையில் வதைவபடுவது தொடர்கிறது. பணம் உள்ளவர்கள் தப்பிக்கொள்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது. அதிஷ்டமும் இருக்க வேண்டுமே. வீட்டில் அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? அக்கா சந்தைக்கு மீன் வாங்கி வந்திருப்பாளா? தங்கச்சி டிய+ஷனுக்கு போயிருப்பாள். விபரம் புரியாத அக்காவின் சின்னமகள் ஊமல்கொட்டை எறிந்து அல்லது இலுப்பைக்கொட்டை பொறுக்கி விளையாடுவாள். மாமா அருகில் இல்லாதது மறந்திருப்பாரோ? ஜன்னல்களைத் திறந்து விட்டால் காற்று வரும்தான் பக்கத்து வீட்டிலிருந்து காதுக்கினிய பாடல்கள் இசையுடன் தவழ்ந்து வரும். மரவள்ளித் தோட்டத்திற்கு இறைக்கும் மிஷின் சத்தமும்.... கூடவே மரங்களுடனான பக்கத்து வீட்டு ஆடுகள் தன்வளவுக்குள் வந்துவிட்ட கோபத்தில் தூஷணத்தில் பேசும் கனகுவின் குரலும், சீட்டுக்காவைத் தரவில்லை என்று கேற்றில் நின்று சத்தமிடும் பத்மாவதியின் குரலும்.... அழுத்தி தேய்ந்து மறைகிறது. நேற்று அழைத்துப் போனவனை இழுத்து வந்து எறிந்துவிட்டுப் போகிற ப+ட்ஸ் கால்கள் மீதான எரிச்சல் மெதுமெதுவாக அதிகரிக்கிறது. விழுந்தவனின் குரல் முனகலில் முடிகிறது. வதைபட்டு, வதைபட்டு சத்தமே வெளிவரவில்லை. ~சத்தம்| போடக்கூடாது என்று வெருட்டி இருப்பார்களோ| பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சுட்டிருப்பார்களோ? மண் அடைத்து இறுக்கிய எஸ்லோன் பைப்பால் காயம் வெளித்தெரியாமல் அடித்திருக்கலாம். சுருண்டு படுத்து உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான். ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ~எனி என்ன வேணும்?| இதுக்குத்தான் எங்கட அறைக்கு கைவைக்க முன்னமே ~விசாரணை செய் அல்லது விடுதலை செய்| எண்டு சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருப்போம் எண்டு கேட்டனான். ஏதோ என்ர சுயநலத்திற்காகக் கேட்ட மாதிரி ஒத்துழைப்புத் தரேல்லை. இப்ப எங்களிட்ட வந்திட்டான்.... எல்லோரும் மௌனமாக நின்றிருந்தனர். ~~நீங்களோ நானோ புலிகளல்ல.... தமிழர்கள்.... ஒருவேளை நீங்கள் எந்த தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர்களாயுமிருக்கலாம். ஆனால் வதை வரி எல்லாம் ஒன்றுதானே! ஏங்களை நம்பியிருக்கிற அம்மா, அப்பா, தங்கை, அக்கா, உறவுகள்.... ஊர்.... உலகம்.... குட்டிமணிக்கு இது போன்ற எத்தனை தமிழர்களுக்கு பெயர் தெரியாத உறவுகளுக்கு கொடுமை நிறையில நடந்திருக்கும். வெளியிலை தெரியாது. ஏங்களுக்கு நல்ல படிப்பினை இது.... வெளியிலை தெரியாது மௌனம் கலையவில்லை. சிந்தித்து சிந்தித்து மூளை தான் பிசகும். ஏதிராளியின்ர பலம் இறுகும்.... நாங்கள் அடிபட்டு, உதைபட்டு. இரத்தம் கக்கி இறந்து போகலாம்.... பிறகும் இந்த அறை அப்பாவித் தமிழர்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும்.... விமோசனம் கிடையாது. ~மறுகன்னத்தை காட்டு என்பதற்கு நாம் யேசுநாதர் இல்லை.... மகாத்மாக்களுமல்ல.... நாங்கள் எங்கள் குடும்பம் உறவு பிள்ளைகள் எண்டு இருக்கிறவர்கள். பட்டினி என்பதே தெரியாவதவர்கள். பசித்தால் மரவள்ளிக்கிழங்காவது அவிச்சசு சம்பலுடன் சாப்பிடலாம். வுளவில் இருக்கிற பழங்களைச் சாப்பிடலாம்... மாறாக.... இவங்கட பாணை, கறியை நினைத்தால் அருவருப்பாய்தான் வரும். வாய்க்கால் தண்ணியில், மழைவெள்ளத்தில் நனைஞ்சாலே சுகம்தான். பாருங்கோ. குளிச்சு எத்தனை நாள்? குதிரையை மட்டும் தான் அரசியல்வாதி நம்புவான். மீட்பவர்களும் தலைமைப்பதவிக்குப்போட்டி.... எங்கட சாவு எதையும் சாதிக்காது| பேசியவனின் குரல் கம்மியது. தாயை நினைத்திருக்கலாம். தன் கிராமத்து அவலங்களை நினைத்திருக்கலாம். ~~நீ யாழ்ப்பாணந்தான். மட்டக்களப்பான்.... நீ உயர்ந்த ஜாதி.... நான் ஏழை.... நீ தோட்டக்காட்டான்.... எல்லாம் போய் அப்பாவித் தமிழ்க்கைதிகள் என்று வதைபடும் நிலைக்கு வந்துவிட்டதின் சோகம் இழையோடியிருக்கலாம். வெளியில் ப+ட்ஸ் கால்களின் சத்தம் அதிகரிக்கக் கேட்டது. யாரோ தலைவர் சிறைச்சாலையை பார்க்க வருகிறாராம்.... யாரோ கிசுகிசுத்தது. நேற்று இவன்.... இ.ன்று நீ நாளை நான்.... இப்படி அடிபட்டு சிதைந்து செத்துப் போய்க் கொண்டிருப்போம்.| காலம். மாறிக்கொண்டிருந்தது. வாள் என்பது மாறி துப்பாக்கி, ஏ.கே.47 என வந்து நிற்கிறது. மனதரில் தான் மாற்றம் இல்லை. சாப்பாட்டு மணி அடித்தது.... பசி வந்தால் பத்தும் மறந்து போம். மணி அடித்தால் பசிக்கு சாவு மணியா? ஏன்பது இங்குள்ள கேள்வி. வதை முகாமில் வாழ்வது தான் தலைவிதியா? நேரம் தெரியாது. காலம் புரியாது. பூட்ஸ் கால்களின் உதை.... சிவக்கக்காய்ச்சிய இரும்பின் சூடு.... தலைகீழாகத் தொங்கவிட்டு கீழே தீமூட்டி.... எரிகின்ற வெக்கையின் தகிப்பு.... விடுதலை என்பதே இல்லை எனில்.... மரணம் என்பதுதான் இறுதி விடுதலையா? கண்களில் கண்ணீர் உருண்டது நேற்று அவன் இன்று நீ.... நாளை நான்.... மாறாக இன்று நான் எனில்.... நினைக்கும் போதே நெஞ்சு வலித்தது. மரணம் அருகில் வந்து கதவை தட்டும். மீட்பார்க்ள வந்து மீட்கமாட்டார்களா? ஏக்கமும் இருந்தது பட்டினி கிடக்காமல்.. எந்த வலியும் புரியாமல், உங்கள் நிலம்... எங்கள் வீடு.... எங்கள் உறவு.... எங்கள் சுற்றாடல்.... திருமணவிழா.... இழவு வீடு.... கலைவிழா.... பத்திகளாக மக்களுடன் ஒன்றிய வாழ்வு.... எல்லாம் போய்.... இதுவே நிரந்தரமாகின்றதா? கைது செய்வதை நிறுத்து! விசாரணை செய்!! ஏதுவும் நினைத்தது நடப்பதில்லை. ~~ஒரு நேரமே பசி பொறுக்கமாட்டன்.... எப்படி?! அம்மா கவலைப்படுவாள். ஏப்படி உண்ணாவிரதம் இருப்பது? முடியுமா? மரணத்தை வலிந்து வரவேற்பதா? ஆயிரம் வினாக்கள் அவனுள்.... உயிர் போவதற்கு வழிகளா இல்லை.... அவர்கள் அடிக்கும்போது உயிர் பிரிந்தால்....? தீர்மானித்துவிட்டான்.... நிமிர்ந்து பார்த்தான்.... இவனின் சம்மதத்திற்கு காத்திருந்தவனின் முகத்திலும் ப+ரிப்பு.... தாடியைக் தடவிக் கொண்டான். ~~புலிகளல்ல நாம்.... தமிழர்கள்....|| விடுதலை கிடைக்குமோ தெரியாது. ஏனினும் எதிர்கால போராட்டத்திற்கு.... ஒற்றுமைக்கு சிறு ஒத்துழைப்பு என நினைப்போமே| அனைவரின் முகத்திலும் சந்தோஷம் நிழலாடியது. கைகளை ஊன்றி எழுந்து கொண்டனர். சாப்பாட்டுமணி அடித்துக்கொண்டிருந்தது. இவர்களின் மௌனத்தால்.... ஒரு கணம் சிறைச்சாலை நிலிர்த்தது. முல்லை அமுதன்

Saturday 28 January 2012

(ஆ)சாமி வரம்




இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான்.
‘ஏன் வீட்டுக்காரர் வரேல்லையே?’
அப்பா கேட்டார்.
‘இல்லை அண்ணை நாளை வீரபத்திரர் கோயில் கொடியேறுது, அதான்..’ சின்னமணி இழுத்தான்.
அப்பா வீட்டுக்குள் வந்து பார்த்தார்.
‘என்ன இன்னும் வெளிக்கிடேல்லையே?’ பார்வை கேள்வியாய் விழுந்தது.
அடிவளவில் கட்டியிருந்த மாடு எதற்கோ கத்தியது.
அப்பா வீட்டில் இன்றியரவு நிற்க மாட்டார் என்று அந்த மாட்டுக்கும் தெரியுமோ?
அப்பாவுக்கு பிள்ளைகளைவிட வளர்ப்பு பிராணிகளிடம் பாசம் அதிதம்.
மாடுகள்..ஆடுகள். நாய்..
‘அண்ணை! இரண்டு செம்மறியாடு வேண்டி விடுங்கோ, வீட்டுக்கு நல்லது’ யாரோ சொன்னதற்காய் செம்மறியாடும் வீடு வந்து சேர்ந்து நாலு மாதங்களிருக்கும்.
‘கெதிப்பண்ணுங்கோ!’ அப்பா துரிதப்படுத்துகிறார்.
‘கமலம் மாமி வீட்டை இண்டை படங்கள் போடுகினமாம்.. இந்த நேரம் பாத்து அப்பா இஞ்ச போவம் எண்டு அவசரப்படுத்துகிறார்’ அக்கா காதில் சொன்னாள்.
கார்த்திக் படமாம். அக்காவிற்கு கார்த்திக் படமென்றால் உயிர். கொம்பாஸ் பெட்டியில் இருந்த கார்த்திக்கின்போட்டோவைப் பார்த்துவிட்டு அப்பா ஆடின சந்நதம் மறக்க முடியாதது.
அப்பா மிகவும் நல்லவர். தானுண்டு தன் வேளையுண்டு என்றிருப்பவர். எங்களின் குறும்புகள்தான் சிலசமயங்களில் அவருக்கு கோபத்தை உண்டுபண்ணும். திருந்துங்கள் அம்மாவின் ஆதரவான அணைப்பு எப்போதும் இருக்கும். களவில் படம் பார்க்கப்போன எனக்கு கம்பி காய்ச்சி சூடு போட்ட அப்பா, தூரமாய் போய்விட, அம்மா அழுதபடி மருந்து போட்டதும் மறக்க முடியாதது.
பூட்டிய கதவை மீண்டும் ஒருதடவை சரிபார்த்துவிட்டு லொறியில் ஏறினார் அப்பா.
படலைக்கு வெளியில் வந்து தன்வெறுமையை தன் பாஷையில் சொல்லி அழுதது எங்கள் ஸீஸர். பாவம், சின்னக் குட்டியில் வந்தது. இப்ப வளர்ந்திட்டுது.
கிறவல் ஒழுங்கை விலகி கார் ரோட்டு வந்துவிட்ட லொறி தனது வேகத்தை அதிகப்படுத்தியது.
குளிர்காற்று முகத்தில் விழ.. •கமாக இருந்தது.
அக்கா வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சின்னக்கா அம்மாவுடன் ஏதோ கு•கு•த்தபடி இருந்தாள்.
கமலம் மாமி வீட்டில் படம் பார்க்க போகேலாமப் போய்விட்டது என்ற கவலை அவளுக்குத்தான்.
வழியில் வாசிகசாலை ஒன்றில் சீர்காழியின் பாடல் போய்க் கொண்டிருந்தது.
அம்மா ‘முருகா’ என்றாள்.
‘மாட்டிற்கு தவிடு புண்ணாக்கு வைச்சனியே’ அப்பா கேட்டார்.
அம்மா ‘ம்’ கொட்டினாள்.
மனுஷனுக்கு எப்பவும் மாடாடென்ற எண்ணம்தான். சொல்லவில்லை. எப்போது அப்பாவிடமிருந்து தாலியை வாங்கிக் கொண்டாளோ அப்போது முதல் மெளனம்தான்.
அக்கா மட்டும் சிலசமயம் அப்பாவுடன் வாய் காட்டும். இப்ப அவளும் திருமணமாகிப் போய் மூன்று வருடங்களாகியும் பிள்ளைகள் இல்லையென்று அத்தானின் கோபத்திற்கு ஆளாகி வீடு வந்துவிட்டாள்.
கோயில் வந்துவிட்டது.
அம்மன் கோயில்.. பெயர் பெற்ற கோயில்.. அதில் செவ்வாய், வெள்ளியில் இடைவிடாமல் பூஜை நடக்கும்.
அழைத்து வரத் தொடங்கினார்.
அக்காவுக்கும் குழந்தை கிடைத்து.. அவர் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வந்தோம்.
எனக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது. வயது அதிகமாகி விடாததினாலோ என்னவோ புதினம் மாதிரித்தான் எல்லாம் தென்பட்டது.
அப்பாவும், அம்மாவும் கண்களை மூடிய படி சாமி சொல்வதையே கேட்டபடி இருப்பர். பெரிய அக்கா கலங்கிய கண்களுடன் மூலையில் உட்கார்ந்திருப்பார். சின்னக்கா தன் புதிய சிநேகிதியுடன் அரட்டையில் இருப்பாள்.
ஆறு மாதங்கள் தொடர்ந்தன.
சின்னமணிக்கும் பிள்ளைகள் இங்கு வரத் தொடங்கினபோதுதான் கிடைத்தனவாம்.
எனக்கு இதைப் பார்க்க டாக்டர் கோவூரின் கதைகளே ஞாபகத்திற்கு வரும்.
விடிய இன்னமும் நேரமிருந்தது.
சாமியாடி ஒரு பெண்ணை அந்த தென்னை மரத்தில் கட்டியிருந்தார். அவளுக்கு சவுக்கினால் அடித்து.. அவள் களைத்தபின், அவளின் தலைமயிரை பிடித்து தென்னை மரத்தில் பதித்து ஆணிஅடித்ததும்.. பெண்ணும் மயங்கி, சாய்ந்து கிடந்த பெண்ணின் பெற்றவர்களும் பயந்தபடி இருந்தனர். பேய் கழிந்துவிட்டதாம். அருகில் ஆணி.. தலைமயிர்ச்சுருள்.. தென்னை மரம்.. கற்பூர ஒளி.. சாம்பிராணிப் புசை ஞாபகத்தில் வர.. பயம் அதிகரித்தது.
சின்னமணி லொறியில் படுத்திருந்தார்.. அப்பா ஆண்களுடன் மணலில் படுத்திருந்தார்.
கழிப்பு கழிக்கவென வந்திருந்த பெண்கள் தனியே படுத்திருந்தனர். மயான அமைதி..
யாவரும் அசதியுடன் தூங்கிவிட்டனர்.
பெரிய அக்காவும் அந்த அறைக்குள்தான்.. சின்னக்கா அம்மாவுடன்.. எனக்குத் தூக்கம் வரவில்லை.
திடீரென.. ஐந்துமணி இருக்கும்.. விடியவில்லை.. இருள் இன்னமும் அகலாத பொழுதில்.. பயந்தபடி படுத்திருந்த என்னை அந்த ஒலி எழுந்து உட்கார வைத்துவிட யாவரும் விழித்துவிட்டனர்.
தென்னை மரத்தைப் பார்த்தேன்.. இருளில் மர்ம உருவம் தெரிந்தது.
திரும்பி ஒலி வந்த திசையை பார்த்தேன்..
ஒரு பெண்ணின் ஆவேச அலறலைத் தொடர்ந்து ஒரு ஆணின்அவலமான..ஈனமான.. மரணத்திற்கு முன்பான ஒலியும் கேட்டு அடங்கியது.
யாவரும் எழுந்து நடந்தனர்.
அக்கா நின்றிருந்தாள்.. தலைவிரி கோலமாக..
தேங்காய் எண்ணெய் விளக்கின் ஒளியிலும் அவளின் கோபக் கண்கள் பிரகாசமாய் தெரிந்தன.
ஏதோ நடந்திருக்கிறது? மண்டையில் உறைக்க எனக்குகணப்பொழுது பிடித்தது. மாறாக மற்றவர்கள் வாய்பிளந்து நின்றனர்.
‘அக்கா..! அக்கா..!’
கண்ணகியை நினைவு படுத்தினாள்.
அருகில் இரத்தவெள்ளத்தில்.. பிள்ளைவரம் வேண்ட அல்லது பில்லை சூன்யம் அகல வந்து தரிசனம்வேண்டிய எல்லோரும் சாமியாகி விட்ட அந்த வல்லிபுரம் என்கிற சாமி.. சுடலைமாடனை வாட்டுவதாக.. கொள்ளிவாய் பிசாசுவை விரட்டுவதாக.. பிள்ளவைரம் கொடுப்பதாக நம்ப வைத்து சாமியாடிய.. அந்த அவன்.. பிணமாகக் கிடந்தான்.
‡ முல்லை அமிழ்தன்,
நன்றி:மேகம்

Thursday 10 November 2011

கருச்சிதைவு



ஏழு மணியிருக்கும். போன் அடித்தது.
உறவினர் மகள் தர்மினி தான்....
மாமா! செய்தி கேட்டியளே..
;இல்லை' என்றான் சுந்தரேசன்
;உங்கள் மருமகள் கிருத்திகாவுக்கு அபோர்ஷனாம்'
திகைப்பு ஏற்படவில்லை.
;அப்படியா' என்றான் அமைதியாக...
தர்மினிக்கும் சுந்தரேசன் அமைதியாக ஒற்றைச்சொல்லில் பதில்தந்தது ஏமாற்றமாக இருந்தாலும் எதிர்பார்த்ததுதான்.

சுந்தரேசன் தன் மூன்று தங்கைகளின் வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்தவன். பெற்றோர்கள் கூடித்தான் தங்கைக்கும் திருமணம் நடந்தது. சுந்தரேசனின் தகப்பனும் ;மூத்தபெண்பிள்ளை' என்று கூடிவந்த சம்மந்தத்தை சந்தோஷமாக ஏற்று... தன் சக்திக்கு மீறியதாக நடாத்தி முடித்தார்.
தனிமையாக தன் இயலாமையை எண்ணி சுந்தரேசனின் தகப்பன் அழுததை இப்போது நினைத்தாலும் வலித்தது. ஊரார் மெய்ச்சினர்... நல்ல மருமகன்.... ரஜனிகாந்த் மாதிரி....

சுந்தரேசனின் தந்தையார் பாதுகாப்பு உத்தியோகத்தவராகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடமைபுரிந்து இளைப்பாறிய போது கிடைத்த பணத்துடன் சிங்கராயர்; வளவில் இருந்த நாலு பரப்புக்காணியையும் விற்று இராப்பகலாக மிகவும் சிரமப்பட்டுக் கட்டிய இருந்த வீட்டையும் சீவிய உருத்து வைக்காமல் கேட்டபோதும் மறுவார்த்தை பேசாமல் திருமணத்தைச் செய்து வைத்தாலும்...மற்ற இரண்டு குமர்களும் தயாராய் நிற்பதைக் காணும் போதெல்லாம் அவருக்குக் கண்ணீர் வரும்.

தந்தையின் அழுகை.....அடிக்கடி தொட்டதெற்கெல்லாம் மாமனார் வீட்டை எதிர்பார்த்தபடி நிற்கும் மருமகன்.... கிருத்திகாவும் பிறந்தபின்னர் ...எல்லாமே தாய்மாமன் பார்க்;க வேண்டும் என்ற தோரனையில். ;அப்பாவும் பாவம் .... வரும் மாப்பிள்ளை நல்லாயிருந்தால்....உதவியாக இருக்கும் என நம்பியவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. பெண்பிள்ளையைப் பெற்றவர்கலெல்லாம் கூனிக் குறுகிப்போகவேணுமா?....கோபம் வரும்... இருட்டடி அடிப்போமா' என நண்பர்களுடன் கதைக்கும் போதெல்லாம் சொல்வான் சுந்தரேசன்.
;நீ சின்னப்பிள்ளை. நல்லது கெட்டது தெரியாது' அப்பாவின் வார்த்தை காதில் ஒலிக்க சுந்தரேசனும் மௌனமாவான். ஆனால் உள்ளுக்குள் பொருமுவான்.

;பெட்டைப்பயல் ...' இனாமாக சீதனக்காசு. வீடுவளவு... சீவியஉருத்து வைக்காமல் எழுதியது... அடிவளவுக் கிணத்திலையும் பங்குவேணும் வீட்டுக்காணிக்குள் தனிக்கிணறு இருந்தும் ..அத்துடன் தொட்டதற்கெல்லாம் தங்கையுடன் சண்டை. வாட்டமுற்ற முகத்துடன் வாழ்க்கை நடத்தும் தங்கை.. என்ன மனிசன் ... கடவுளும் மன்னிக்கமாட்டான்.'

வளவுக்குள் இருந்த அம்மாளாச்சியை நினைத்துக் கொள்வான். ;அம்மாளாச்சி பார்த்துக்கொள்.... முதற் கோணல் முற்றும் கோணல் ஆகி விடப்போகிறது.'

காலம் கரைந்தன.
தங்கையின் மகள் கிருத்திகாவும் வளர்ந்தாள்.
சாமத்தியச்சடங்கும் தடபுடலாய் தாய்மாமனாக சுந்தரேசன் தான் நடாத்தி முடித்தான்.; ;இப்படி எத்தனை நாளைக்கு தாய்மாமனாய் நடந்து கொள்ளப்போகிறீர்கள்?.' சுந்தரேசனின் மனைவியும் கேட்காமலில்லை.

;பார்ப்போம் ...பிரச்சினை செய்யவேண்டாம். முதலியார் வளவு மாமாவின் குடுமபம் .. எப்படிப்பட்டகுடும்பம்; ....இப்ப இப்படி எண்டு சனம் சொல்லக்கூடாது.' என்பதில் கவனமாக இருந்தான்.

மகன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியை சத்தமாக போட்டுக் கேட்க ஆயத்தமாக நினைவு வந்தது. தலை வலித்தது. இப்போதெல்லாம் சிந்திக்க முடியவில்லை. ஏதோ நடக்கட்டும் என்றிருந்துவிட்டால் வலியில்லை. பிடரிப்பக்கம் நரம்புகள் வலித்தன. ;விசர்; ஆக்கப்போகுதோ' தனக்குள் நினைத்துச் சிரித்தான் சுந்தரேசன்.

;எட தம்பி தமிழ் ரிவியைப் போடுமன். செய்தி வரப் போகுது! '
மகன் செவிசாய்க்கவில்லை. கிருத்திகாவாவது நல்லாயிருப்பாள் என்றிருந்ததும் ஏமாற்றமாகிவிட்டது.
;அவளும் ஏழாம் நம்பர்' மனைவி சொன்னாள்.

பரந்த தன் நெற்றிப்பரப்பை இடது கையால் அழுத்திக்கொண்டு ...;இப்பவே உதுகளாலை ஹார்ட் பேஷண்ட் ஆகிப் போட்டன் ..சனம் இன்னும் திருந்துதில்லை?'சலித்தபடி எழுந்து மாடிக்குச் சென்றான்.சுந்தரேசனின் மூத்தமகள்கொம்பியூட்டரில் கேம் விளையாடிக்கொண்டிருந்தாள். வாஷ்பேஷினில் முகத்தை அருகாக்கி தண்ணீரைத் திறந்துவிட்டான்.

நான் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவளும் எவ்வளவு தூரம் எனக்காக விட்டுத்தந்திருக்கிறாள். திருமணமாகியபின்பும் என் அம்மா அப்பா சகோதரர் என்று காசுஅனுப்பவும் வழிவிட்டிருந்தாள் தானே. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது தானே வாழ்க்கை. அத்துடன் அன்பாகவும் இருத்தால் தான் அது ஒரு நல்ல குடும்பத்திற்கு அழகு. அப்பதானே தாம்பத்தியமும் சிறப்பாக இருக்கும்.
ஆனால் உந்தச் சனம் ஏன் மாறுதில்லை. சுந்தரேசன் அலுத்துக்கொண்டபடி கட்டிலுக்குச் சென்று சரிந்தபடி நினைவுகளை மீட்டிப்பார்த்தான்.

மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்த பின்பும் வீட்டிற்கு வந்த மருமக்களின் சுரண்டல்கள் போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்தன.... ஒற்றுமையாக சகோதரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே தனது பெரிய முதலியார்;வளவுக் காணியை பிள்ளைகளுக்கு சமமாகப் பிரித்து வீடுகளும் அருகருகாகக் கட்;டிச் சீதனமாகக் கொடுத்தார். வயதுபோக அப்பாவின் இயலாமை...அஸ்மாநோயின் கொடூரம்..ஏனைய நோய்களும் கூட்டுச்சேர்ந்துகொள்ள அம்மாவும் மனதளவில் நோயாளியாகிவிட்டாள். அதைவிட மருமகன்களின் தொல்லை சுந்தரேசனின் திருமணத்தில் ஒருவரும் அக்கறைப்படாததால் அதைப்பற்றி மற்றவர்களோடு கதைக்கவும் முடியாமல் சிரமப்பட்டாள். சுந்தரேசனின் உழைப்பை உறிஞ்சுபவர்களுக்கு அவனது திருமணமும் தள்ளிப்போவது சந்தோஷமே. பின்பு ஒருவாறு முதிர்கன்னிபோல் திருமணம் முடிந்தாலும் குடும்பத்தை அளவுக்கதிகமாகச் சுமந்ததாலோ என்னவோ திருமணத்தின் பின்பும் பாதிக்கதிகமாகச் சுந்தரேசன் சுமக்கவே செய்தான். இலங்கையின் வடபகுதி நாட்டுநிலைமை காரணமாக தன் நாட்டையும் தந்தை தாயையும் விட்டு பொருளாதார அகதியாக புலம் பெயரவேண்டிய கட்டாயத்தால் லண்டனுக்கு குடும்பத்துடன் புலம்பெயந்தான்.

புலம்பெயர் நாட்டில் அவன் அனுபவப்பட்டது ஏராளம். புலம்பெயர்ந்த தன் உறவினர்களின் உண்மை முகங்கள்... பணத்திற்கு கொடுக்கும் மதிப்பில் ஒரு வீதமாவது மனிதருக்கு இல்லை என்பதையும் போலியாக சிரித்து ...போலியாக உடுத்தி ...கடன்பட்டுக் காரும் கிரடிக்காட்டில் கடையும் வட்டிக்கு கடன் எடுத்து வீடும் என போலியான வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு விட்டனர். சிங்கள அரசாங்கத்தால் அகதியாக்கப்பட்டதைவி;ட சந்தோஷத்தை தொலைத்தவர்களாகவே தமிழன் மாறிவிட்டது சாபக்கேடாயிற்று. அதனையும் விட ஊரில் இருக்கும் போது கஞ்சிக்கு உப்புத்தானே இல்லை என்று ஓரளவிற்காவது திருப்தியாக இருந்த எம்மவர் புலம்பெயர் நாட்டில் பாலுக்குக் கற்கண்டு இல்லை என்று புலம்பி அழுதுகொண்டு திரிபவர்களாகவே காணப்பட்டனர். ஊரில் எவ்வளவோ பிரச்சனைகள் மத்தியிலும் ஓலைப்பாயில் நிம்மதியாகத் தூங்கியவர்களுக்கு இங்கு பஞ்சணையில் தூக்கமே வராமல் தூக்க மாத்திரையுடன் போராடிக்கொண்டிந்தனர்.

தந்தையார் கூறுவது போல் ;பாம்பு தின்னும் ஊரில் நடுமுறி எனக்கு' என்று சுந்தரேசனும் பாம்பு தின்று பழக்கப்பட்டவன் போல நடித்து வாழப்பழக வேண்டிய சூழ்நிலை. தன்மானத்தை இழந்து ஒரு வேலை. குளிர் நாட்டிற்கு ஏற்றது போன்ற பழக்கப்படாத உடைகளையும் சுமந்தபடி காசுமரமானான்...!!! சரியான தூக்கம் என்பது மறந்தேவிட்டது. சந்தோஷமான உணவு கிடையவே கிடையாது. குளிரில் கைவெடிக்க நாரிப்பிடிப்புடன் நிலக்கீழ் புகையிரதத்தில் (ரியூப்பில்) வேலை வேலை என அலைந்தான். கடைசியில் காசு மரத்தில் காசும் மிஞ்சவில்லை.கிரடிக்காட்.. லோன்..வட்டிக்குக்கடன் சுமைக்கு மேல் சுமை ஈற்றில் இருதயநோயாளி. இது மட்டும் அவன் சொந்த சின்னக் குடும்பத்திற்கு மாத்திரம். பலன் அனுபவித்தவர்கள் பாவம் என ஒதுங்கிவிட்டதுமல்லாமல் முடிவில் பெரிய ஞானிபோல் அவர்களுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என ஒரு அருள் வாக்கு.

சுந்தரேசனுக்கு கடைசியில் ஞானம் வந்தபோது தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது. இனி சாண் போனால் என்ன முழம் போனால் என்ன? படைச்சவன் படி அளப்பான் தானே. பொறுமையில் அப்படி ஒரு பொறுமை.

வெளிநாடு வந்தபின்பு ஊரில் முன்பு சொந்தம் கொண்டாடாத உறவுகள் எல்லாம் சொந்தம் கொண்டாடினர். அதைவிட ஒரு நிமிடக் கோல் எடுத்து திரும்ப எடுக்கும் படி தொலைபேசித் தொல்லைகள் ஏராளம்..ஏராளம்..பணம் கேட்டுத் தொந்தரவுகள். எலக்ரோனிச்சாமான்கள் அழகுசாதனப்பொருட்கள் அனுப்பும்படி அன்பு போன்ற நடிப்பில் உத்தரவுகள். யாவும் மனங்கோனாமல் மேற்கொள்ளப்பட்டன. ச.pலவற்றிற்கு நன்றிகள் மட்டும் சிலவற்றிற்கு பதிலேயில்லை. பலவற்றிக்கு பின்பு தொடர்பேயில்லை. முக்கியமாக திருப்பித்தருவதாக கடன் பெற்றவர்கள். பரிசாக...... நக்கலும் அறவிடமுடியாக்கடனாக கொடுத்த காசும் கிடைக்கவில்லை. துண்டிக்கப்பட்டது அப்படியானவர்களின் உறவும் கூடவே......

கூடப்பிறந்தவர்கள் அப்பாவின் மருமகன்கள் பேரப்பிள்ளைகள் என சுந்தரேசனின் வீட்டுக்காரரின் கடிதங்களிலும் தொலைபேசிகளிலும் வடிவாகச்சாப்பிடு... உடம்பைக்கவனி... நித்திரை முக்கியம்...; என்ற பசப்புவார்த்தைகளுடன் கூடிய காசுக்கடிதங்கள் தொலைபேசிகள் என்பனவற்றின் மூலம் போலியான ஒப்பந்தங்கள் அரங்கேறியமையும் அளவுக்கதிகமே. அப்பா கிணறு வெட்டி மோட்டர் போட்டுத் தருவதாக திருமணத்தின் முன்பு கூறியதாக ஒரு தங்கையின் கணவர். அந்த வேலையும் செய்யச் சொல்லி பணம் உண்டியலில் பறந்தது. வருத்தக்காரியைக் கட்டிப் பேய்க்காட்டியதுமல்லாமல் வீடுகட்டித்தரவில்லை என இன்னொரு தங்கையின் கணவர்;. வீடு கட்டச்சொல்லி அதற்க்குப் பெறுமதியாக காணி அப்பா கொடுத்தது தெரிந்தும் பறவாயில்லை அந்தத்தங்கை நல்லாக இருந்தால் சரி என்று வீடும் கட்டிக்கொடுத்தாகிவிட்டது. பின்பு கடை போட என பணமும் கொடுத்தாகிவிட்டது.

மூத்த தங்கையின் கணவர் எல்லாரும் வெளிநாடு போய் நல்லாயிருக்கிறான்கள் நாங்கள் போனால் நல்லாய் வந்திடுவம் என்ற எரிச்சலில் உன்ரை அண்ணை காசுதரமாட்டாரோ என திட்டுகிறார் என்று கண்ணைக்கசக்கிய தங்கைக்கும் ஆறுதல் கூறி அவரை தான் போகமுன்பு வெளிநாடு அனுப்பியும் சுவரில் எறிந்த பந்தாக ஒவ்வொரு நாடாகச் சென்று திரும்பிவிடுவார். வந்தால் சண்டை தான். முடிவில் தங்கையிடம் இதுதான் கடைசித்தடவையாக என்னால் பணம் கட்டுவது எனறு சுந்தரேசன் கடுமையாகச் சொல்லிவிட இறுதியாக லண்டன் சென்றார். அங்கும் விசாவில்லை அதனால் காசு அனுப்பமுடியாது என ஒதுங்கிவிட அந்தத் தங்கையின் குடும்பத்தையும் அப்பா அம்மாவுடன் சேர்த்துச் சுமந்தான் சுந்தரேசன். அந்தத்தங்கையின் மகள் தான் கிருத்திகா. அவளுக்கு இரண்டு தம்பிகள். தந்தையின் பாசம் கிடைக்காததால் மாமா அம்மப்பா அம்மம்மாவில்தான் அவர்களுக்கும் பிரியம் அதிகம். சுந்தரேசனுக்கும் அப்படியே. தன் மூத்த பிள்ளை கிருத்திகா என அடிக்கடி கூறிக்கொள்வான். அன்பும் மற்ற மருமக்களைவிட அதிகமே.

இதனால் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கில் காசு அனுப்பும் போது சுந்தரேசன் மட்டும் இலட்சக்கணக்கில் காசு அனுப்பினான். அண்ணாவாக இருந்தும் சுந்தரேசனுக்கு வயதுகடந்த பின்பு திருமணமாகியதாலும் தங்கையாக இருந்தாலும் உரியகாலத்தில் திருமணமாகியமையால் சுந்தரேசனின் மூத்த மகளுக்கு ஒரு வயதாகும் முன்னரே தங்கை மகள் கிருத்திகாவுக்குச் சாமர்த்திய சடங்கு முடிந்துவிட்டது. வரிவையாக ஏனைய தங்கைகளின் மகள்மாருக்கும் நடந்தேறியது சுந்தரேசனின் செலவில் ... தாய்மாமன் என்ற போர்வையில்...

காலப்போக்கில் சுந்தரேசனின் தந்தையார் காலமாகியதும் நாட்டு நிலமை விசா கிடைக்காத காரணங்களால் தமிழருக்குக் கிடைத்த இன்னொரு சாபக்கேட்டையும் மரணவீட்டுக்கும் போகமுடியாது வேதனைப்பட்டு அனுபவித்துத்தீர்த்தான். ஈற்றில் தனக்குப் பிறந்த இரண்டாவது பிள்ளையான மகனில் தந்தையாரைப்பார்த்து ஓரளவுககாவது ஆறுதல் பட்டதும் உண்டு. அப்போதெல்லாம்; கடவுளும் சின்னசின்ன ஆறுதல் படுத்துவதால் தான் மனிதன் இன்னும் நம்பிக்கையுடன் உயிர் வாழ்கின்றான் என நினைத்துக் கொள்வான்;.

தந்தையின் மரணவீடு...அந்தியட்டி...ஆட்டுத்திவசம் என நாட்களும் நகர தங்கையுடன் இருந்த அம்மாவும் நோயாளியானாள். பல வருடமாகச் சுந்தரேசனைப் பார்க்கவில்லை என்ற கவலை அவளுக்கு.. மகன் வயிற்றுப் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் ஆர்வம் கூடவே.

கிருத்திகாவும் திருமணவயதை அடைந்தாள். சுந்தரேசனும் மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்தான். காதில் தோட்டுடன்.. தோடு இல்லாமல்.. லண்டனில் வீடு தருவீர்களா? என்ற கட்டாயத்துடன் ..... ரொக்கம் நகை கொழும்பில் ஒரு வீடு மாமியாருக்கும் லண்டனில் மாப்பிள்ளைக்குக் கார் அதுவும் பி எம் டவுள்யூ கடைசியாக வந்த மொடல்.... மாப்பிள்ளையின் குடும்பத்தையும் லண்டன் கூப்பிட்டுவிட வேண்டும்...எனப் பல நிபந்தனைகளுடன்....டாக்டர்...எஞ்சினியர்....எக்கவுண்டன்...சிக்கின் கடைக்காரன்...பெற்றோல் ஸ்ரேசன் வைத்திருப்பவர் மதுபானக்கடை வைத்திருப்பவர்...சுப்பமாக்கட்ரில் வேலைசெய்பவர் என பலதரப்பட்வர்களையும் சல்லடை போட்டு இலவசப் பேப்பர் திருமண விளம்பரங்கள் மூலமும் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் தங்கையின் தொலைபேசி வந்தது. தனது கணவருக்கு தன் அக்காவின் மகனைச்செய்வதுதான் இஸ்டமாம் அல்லாவிட்டால் தான் ஓதுங்கிவிடுவாராம். சுந்தரேசன் தனக்குள் சிரித்துக் கொண்டான். இதுவரை பெயரளவில்;;;;; மாப்பிள்ளையாக இருந்தவர் குடும்பத்தில் எந்த ஒரு பொறுப்பும் எடுக்காதவர் ஏறக்குறைய தன் தங்னை திருமணமாகியும் வாழாவெட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் முடிவெடுப்பது தானே என்ற வழமையான வெருட்டலுடன் வருவது சுந்தரேசனுக்குப் பிடிக்கவில்லை. தங்கை மாதிரியில்லாமல் கிருத்திகா ஆவது நல்லாயிருக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் மறுத்து முடிவை மறுபரிசீலிக்கும் படி வற்புறுத்தினான். அப்பாவை எவ்வளவு கவலைப்படுத்தினார்கள். கடைசியில் உங்களையும் நல்லா வைத்திருக்கவில்லை அந்தக் குடும்பத்தில் போனால் கிருத்திகாவும் கஸ்டப்படவேண்டும். இனியும் பணிந்துகொண்டேயிருக்க என்னால் முடியாது. முடிவு சுந்தரேசனின் கருத்து எடுபடவில்லை. இரத்த அழுத்தம் யோசித்தமையால் அதிகரித்ததுதான் மிச்சம்.

இந்தியாவில் திருமணம். கிருத்திகாவுக்கும் அதீத விருப்பமாம். சிறுவயதிலேயே பகிடிபண்ணுவதால் மனதளவில் ஆசையை வளர்த்துவிட்டாளாம். அந்தப்பக்கம் சுந்தரேசனுக்குப் புரியவில்லை. பொறுப்புகளைச் சுமந்தமையாலோ அல்லது அவர்களின் குணம் புரிந்தமையால் தீர்க்கதரிசனமாக முடிவெடுத்ததாகவும் இருக்கலாம். தங்கைக்கும் கிருத்திகாவுக்கும் லண்டன் மாப்பிள்ளை அப்பாவுடன் இனியாவது குடும்பம் சேரலாம். மாமாவும் அங்கிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏற்கனவே தெரிந்த மச்சான் . அழகும் கூட அத்துடன் கிருத்திகாவின் தம்பிகளையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் சீதனம் வேண்டாம் திருமணசெலவைமட்டும் சுந்தரேசன் பொறுப்பெடுத்தால் சரி. தங்கை குடும்பத்தினர் வானத்தில் பறந்தனர்;. இந்த சந்தோஷத்தால் சுந்தரேசனையும் தாயையும் ஏனைய இரு தங்கை குடும்பத்தவரையும் மதியாமல் பல சமயங்களில் புறக்கணித்தனர்.சுந்தரேசன் குடும்பத்தவர் இந்தவிடயத்தில் கூடியளவில் ஒதுங்கினர்.

அதனையும்விட தனது உறவினர் மூலம் சுந்தரேசன் அறிந்த செய்தி மனதை நெருடியது. கூடவே யோசிக்கவும் வைத்தது. கிருத்திகா மணம் முடிக்க தீர்மானிக்கும் தங்கை கணவரின் அக்கா மகன் நிரோஜன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் அந்தப் பெண் அழகாயிருந்தும் ஏழை என்பதால் நிரோஜனின் தாயாரால் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிந்தான். நிரோஜன் வெளிநாடு வந்தபின்பும் காதல் தொடர்வதையறிந்த நிரோஜனின் தாயார் அந்தப் பெண் வீட்டில் போய்ச் சண்டை பிடித்திருக்கின்றா. அது அவர்களுக்கு கை வந்த கலை. சீதனத்தில் குறியான அவர்களுக்கு ஏழைப்பெண்ணின்; கண்ணீர் ஒன்றும் கவலைக்குரியதல்ல. நிரோஜனும் தாயுடன் உடன் பட்டு கிருத்திகாவை மணம் முடிக்கச் சம்மதித்தது ஆத்திரத்தை ஊட்டியது.

நிரோஜன் வீட்டில் பெண் சகோதரிகளோ பணக்கஸ்டமோ பெரிதாக இல்லை. அப்படி இருந்தும் அவர்களுக்கு சீதனத்தில்தான் குறியாக இருந்தமையால் சுந்தரேசனின் தந்தையால்; சீதனமாக கொடுத்த வீடு யாழ்ப்பாணத்தில் மெயின்றோட்டில் உள்ளதால் நல்ல விலைக்குப்போகும் என்பதால் அதில் கண் வைத்துவிட்டனர். எப்படியும் ஒரு பெண் பிள்ளையாகிய கிருத்திகாவுக்குத்தான் அந்த வீடு கொடுப்பார்கள். அத்துடன் தாய்மாமனான சுந்தரேசனிடம் தனது தம்பியாரை வைத்துக் கறந்ததுபோல் சீதனக்காசாகவும் நிறையக் கறக்க வேண்டும் என தீர்மானித்தனர். முதலில் தங்கையையும் கிருத்திகாவையும் கைக்குள் போட்டனர். அவர்களும் நிரோஜன் முதலில் இன்னொரு பெண்ணைக் காதலிப்பது தெரிந்தும் தலையாட்டிவிட்டனர். தங்கைக்கு அது வயதுக் கோளாறு என்று புரியவைக்கப் பட்டதாக சுந்தரேசன் அறிந்தான்.

சுந்தரேசன் அனுப்பும் பணத்தில் இருந்து கிருத்திகாவுக்கென நகைகள் ஏற்கனவே செய்யப்பட்டன. மரகதப்பதக்கம்...அட்டியல்.. ஆரம்.. முத்துசங்கிலி...வளையல்கள் என பெண்ணுக்கு தேவையான திருமண நகைகள் தயாராக இருப்பதை அறிந்தும் அறியாதது போல் கிருத்திகாவிடமும் தங்கையிடமும் நகை வேண்டவேண்டும். இருக்கும் நகையுடன் சிங்கப்பூர் நகைகளாக வாங்கிவிட்டால் நெடுக பாவிக்கலாம். தனது மகனிடம் சுந்தரேசன் காசை லண்டனில் கொடுத்தால் நல்லம். நிரோஜன் நன்றாக செலக்ட் பண்ணிவிடுவான். சுந்தரேசன் பாவம். வேலையுடன் அலையத் தேவையில்லை. என்ன பெருந்தன்மை. இத்தனைக்கும் தனது தம்பியான கிருத்திகாவின் அப்பாவிடம் காசு கேட்கச் சொல்லவில்லை. இடையிடையே கிருத்திகாவின் அப்பா வருத்தக்காரன் அவனுக்கு குளிருக்குள் வேலைக்கு போகமுடியாமல் நாரிப்பிடிப்பால் கஸ்டப்படுகிறானாம். முடிந்தால் சுந்தரேசனிடம் உதவிசெய்யச்சொல்லும் படி உத்தரவுகளும் போடப்பட்டது.

அன்று தலைசுற்றுவதாக கூறி சுந்தரேசன் படுத்திருந்தான். அப்போது நிரோஜனின் தம்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. சுந்தரேசனின் மனைவி தொலைபேசியை எடுத்த போது கிருத்திகாவின் திருமண நகைக்கும் இந்தியாவில் நடக்கும் திருமணத்திற்கும் செலவு காசு தந்தால் போதும் என்று பெருந்தன்மையாக கதைத்துவிட்டு இரண்டாயிரம் பவுன்ஸ் நகைக்கு மட்டும் ஆயத்தப்படுத்தும் படி கேட்டுக்கொண்டான். அவர்களைப்பற்றி ஏற்கனவே சுந்தரேசன் மூலம் அறிந்தமையால் உடனடியாகவே நீர் சின்னப்பிள்ளை ஏற்கனவே அதற்குரிய பணம் அனுப்பப்பட்டு நகையும் கிருத்திகாவுக்குப் பிடித்தமாதிரி செய்தாகிவிட்டது. கிருத்திகாதான் நகை போடப் போகின்றா ஆகவே நீரும் நிரோஜனும் ஏனைய வேலைகளைக் கவனிக்கும் படி அவர்கள் பாஷையிலே தந்திரமாகவும் நகைச்சுவையாகவும் பதில் கொடுத்து வைத்துவிட்டாள். இதனைக் கேட்டுக்கொண்டு படுத்திருந்த சுந்தரேசனுக்குக் கோபம் வந்துவிட்டது. குட்டக்குட்ட குனியமுடியாது என்ற முடிவுடன் எழுந்து கீழே வந்தான்.

சுந்தரேசன் தங்கைக்காகவும் கிருத்திகாவின் மேலுள்ள அன்பினாலும் சரி இன்னும் இரண்டு இலட்சம் அனுப்பினால் போதும் கிருத்திகாவின் திருமணம் முடிந்தால் அம்மாவை எப்படியும் என்னுடன் அழைத்து வைத்திருக்க வேண்டும். இது வரை தனது குடும்பத்திற்கு என எதுவும் செய்யவில்லை. அதன் பின்பாவது நிம்மதியாக இருக்கலாம் எனப்பலவாறு சிந்தித்த வண்ணம் N;;;ஷாபாவில் அமர்ந்தான்.

அடுத்த நாள் இந்தியாவிற்கு திருமணத்திற்காக செல்வதற்கான விசா ஆயத்தங்களைச் செய்ய கொழும்புக்கு வந்திருந்த தங்கையோடு தொலைபேசியில் கதைத்து திருமணச்செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தான். தன்னால் திருமணத்திற்கு இந்தியா வரமுடியாததையும் கூறி விட்டான். தங்கைக்கு அவனின் பணநெருக்கடியோ கஸ்டமோ விளங்கியிருந்தால் இந்தியாவில் திருமணம் செய்யவோ அல்லது அந்தத் திருமணத்தையோ தற்போது நடாத்தவோ யோசித்திருக்கலாம். ஆனால் சுந்தரேசன் மாதிரி அண்ணாக்கள் இருக்கும் மட்டும் தங்கைகள் எங்கே யோசிக்கப் போகிறார்கள்.

மறுநாள் வேலைக்குப் போகவென சுந்தரேசன் அவசரமாக வெளிக்கிடும் போது மீண்டும் நிரோஜனின் தம்பி தொலைபேசியில்... இம்முறை சுந்தரேசன் தான் போனை எடுத்தான். அவன் நேரடியாக விடயத்திற்கு வந்தான். ;மாமா இந்தியாவிற்கு நாங்கள் லண்டனில் இருந்து போகவும் ஊரில் இருந்து எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்தியா செல்;லவும் அங்கு தங்கும் ஹொட்டல் செலவு உட்பட திருமணச்செலவும் சேர்த்து நாற்பத்து ஐந்து இலட்சம் பவுண்ஸ் வரும். முதலே கணக்குச் சொல்லிவிடும் படி அம்மா கூறியதாகவும் ஆணித்தரமாகவும் நிதானமாகவும் கூறிக்கொண்டே போனான். சுந்தரேசனுக்கு தலைக்கு மேல் கோபம் வந்து விட்டது. ;ஹலோ நீர் யார் என்னுடன் சீதனத்தைப்பற்றிக் கதைக்க ஒன்றில் உமது அம்மா என்னுடன் கதைக்க வேண்டும். அல்லது வேறு பெரியவர்கள் கதைக்க வேண்டும். தயவு செய்து போனை வைக்கவும். றோங் நம்பர்..' என்று சற்றுக்கடுமையாக்கூறி போனை அடித்து வைத்தே விட்டான். அது வரை அவன் அப்படி முகம் சிவக்க கோபப்பட்டு பார்த்திராத மனைவி பிள்ளைகள் பயந்தே விட்டனர். சாதுமிரண்டால் காடுகொள்ளாது என்பார்களே. அது இது தான் போலும்.... இத்தனைக்கும் கிருத்திகாவின் அப்பா தனக்கும் கிருத்திகாவின் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதர் போல் எந்தப்பொறுப்பும் எடுக்கவும் இல்லை. தூண்டி விட்டுவிட்டு ஒதுங்கிக்கொணடார் வழமைபோல்..

தங்கைக்கு தொலைபேசி எடுத்து நடந்ததைச்சொல்லிப் பேசினான். அவர்களைப்பற்றி இனி தன்னிடம் கதைக்கக் கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவு போட்டுவிட்டான். இதனைத் தங்கையோ கிருத்திகாவோ அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் சம்பந்தம் கலப்பதிலும் நொத்தீஸ் போடுவதிலும் உறவினர்களுக்கு சீதனம் எதிர்பார்காமல் கிருத்திகாவுக்கு திருமணம் லண்டன் மாப்பிள்ளைக்கு நடக்கப்போவதாக பறைசாற்றுவதிலும் இருந்தனர். இதனால் சுந்தரேசனையும் பல தடவைகள் தூக்கி எறிந்ததால் அவன் மனமுடைந்தே விட்டான். அதன் பின்பு நடந்தவைகளின் வலியும் வேதனையும் அதனை அனுபவித்தவர்களுக்கே புரியும். அந்தத்தாக்கங்களில் இருந்து சுந்தரேசன் இன்னும் விடுபடவேயில்லை.

இந்தியாவிற்கு திருமணத்திற்கு சுந்தரேசன் வரவில்லை என்பதையும் அதனால் அங்கும் காசுஉரிக்க முடியாதமையும் செலவு என்ற போர்வையில் நாற்பத்தைந்து இலட்சம் கறக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் வேறுவழியில் கறந்துவிடத் தீர்மானித்தனர். சீதனம் வேண்டாம் என்றவர்கள் எமக்காக இல்லை வேறுநல்ல பெண்கள் நிறைய சீதனத்துடன் வந்தும் நிரோஜனின் அப்பா கவலைப்படக் கூடாது என்பதற்காக என்ற போர்வையில் வீட்டையும் தம்பிமாருக்கு என வைத்திருந்த காணியும் சேர்த்து இந்தியா போகமுன் எழுதிவாங்கினார்கள். ரொக்கமாகத்தர வேண்டும் என்பதால் சுந்தரேசன் மற்ற இரு தங்கைகளுக்கு அனுப்பி வங்கியில் இருந்த பணத்துடன் வட்டிக்கு கடன் வாங்கி தென்னம்பிள்ளைக் காணியை விற்று என ரொக்கமாகவும் பணம் கைமாறியது. வேண்டக் கூடிய இரத்த உறவுகளிடமும் கிருத்திகாவின் திருமணம் முடிந்தால் காணும் என பல்லுக்காட்டியாகி விட்டது. இவ்வளவும் சுந்தரேசனுக்குத் தெரியாது.

திருமணத்திற்காக மகள்பட்ட பாட்டையும் அவசரப்பட்டு எல்லாரையும் பகைத்து கடைசியில் கிருத்திகாவின் வாழ்க்கையும் வீணாகப்போவதை அனுபவத்தால் உணர்ந்த சுந்தரேசனின் தாயார் படுக்கையில் விழுந்து அப்படியே இறந்தார். சுந்தரேசன் பெற்ற தாய்க்குக் கொள்ளிவைக்க கடவுள் மனமிரங்கினார். இருந்தும் தன்னோடு தாயாரை வைத்திருக்கமுடியாமல் போனதற்கும் தன் பிள்ளைகளைப் பார்க்காமல் தாயார் போய்விட்டதாலும் நிரோஜன் குடும்பத்தின் மேல் சுந்தரேசனுக்கு ஆத்திரம் அதிகமாகியது.

கிருத்திகாவும் திருமணம் முடிந்து லண்டனும் வந்தாகிவிட்டது. நிரோஜனுக்கு தாம் கேட்ட பணம் சுந்தரேசன் தரவில்லை என்பதால் கிருத்திகாவை சுந்தரேசனிடம் அழைத்தும் செல்லவில்லை. தொடர் வேதனைகளால் சுந்தரேசனும் இருதய நோய் காரணமாக உயிர் போக இருந்தும் கடவுள் கிருபையால் சத்திர சிகிச்சையின் பின்பு காப்பாற்றப்பட்டான். அப்பவும் கூட கிருத்திகாவை சுந்தரேசனைப்பார்க்க நிரோஜனால் அனுமதிக்கப்படவில்லை.

கிருத்திகாவும் லண்டனில் வேலைக்குப் போவதாக் கேள்விப்பட்டனர். நிரோஜன் சரியான கஞ்சத்தனம் என்றும் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கவே யோசித்துத்தான் செலவுசெய்வானாம். கிருத்திகாவின் சம்பளப்பணத்தையே உடனேயே வாங்கிவிடுவானாம். மற்றப்படி தொடர்பு இல்லை. லண்டனில் வீடு வாங்க வேண்டும் ஆகவே பணவரவு தடைப்பட்டு விடும் என்பதால் குழந்தை பெறுவதையும் நிரோஜன் இரண்டு வருடங்களாக தள்ளிப்போட்டதும் தற்போது கிருத்திகா ஐந்து மாதமாக கர்ப்பமாக இருப்பதாகவும் ஸ்கானிங்கில் அதுவும் பெண் குழந்தை என்பதை அறிந்ததும் கிருத்திகாவைத் தள்ளிவிட்டுருக்கிறான். அப்போது கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டதால் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாம். இதனைக் கூட கிருத்திகாவின் தந்தைக்குக் கூட அறிவிக்கவில்லையாம். யாரோ உறவினர் மூலம் கிருத்திகா வைத்தியசாலையில் இருப்பதையறிந்த கிருத்திகாவின் தந்தை அங்கு சென்று பார்த்தபோது திலீபன் உண்ணாவிரதம் இருந்த கடைசிநாட்களில் தோற்றமளித்தது போல் மெலிந்து கிருத்திகா காணப்பட்டதாகம் கொழும்பில் இருந்த தங்கை மூலம் அறிந்து கொண்டான் சுந்தரேசன்.அப்போது சிட்டுப்போல யாழ்ப்பாணத்தில் அழகாக சைக்களில் பறந்து திரிந்த கிருத்திகாவை நினைவுபடுத்திப்பார்த்தான் சுந்தரேசன்.

சுந்தரேசன் எழுந்து துவாயை எடுத்துக்கொண்டு முகம் கழுவி முகத்தை அழுத்தித் துடைத்தான். ;உவன் பொம்பிளைப்பிள்ளை என்பதால் நசிச்சுகிசுச்சுப் போட்டானோ?' சீ அப்பிடி இருக்காது குழந்தையெண்டால் ஆருக்கும் விரும்பம் தானே. குழந்தை என்றால் பெண் என்ன? ஆண் என்ன? ஆனால் மூத்த வாரிசு பெண் என்றால் அங்கை தானே பிரச்சனை ? தங்கையின் கணவரும் கிருத்திகா பிறந்ததும் பிரச்சினை எடுத்தவர் தானே? அவன் தலைமுறையில் மூத்ததுகள் எல்லாம் ஆண் பிள்ளை தானே? ;சீ சீ ஏன் தப்புதப்பாய் மனது நினைக்கத் தோன்றுகிறது?

;மாமா உங்களுக்குத் தெரியுமா? நிரோஜன் விரும்பி ஏமாற்றிய பின் அந்தப் பிள்ளையை கனடாவில் இருந்து ஒரு பணக்காரப்பையன் திருமணம் முடித்;து நல்லாயிருக்கிறாளாம். அவளது பெற்றோருக்கு தற்போது மாதம் ஐம்பதினாயிரம் ரூபா அனுப்புகிறாளாம். விரைவில் அவளது குடும்பமே கனடா போகப் போகின்றனராம். என்றாள் தர்மினி. கடவுள்தான் நிரோஜன் குடும்பத்திடமிருந்து அவளைக்காப்பாற்றினார் என நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் சுந்தரேசன்.

தங்கை அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டு தற்போது அண்ணாவின் சொல் கேட்காமல் போனோமே என்று கவலைப்படுவது தெரிந்தும் சுந்தரேசன் அலட்டிக்கொள்ளவில்லை.நிரோஜன் கிருத்திகாவின் தாயோடு கூடக் கிருத்திகாவைப் போனிலும் கதைக்க விடுவதில்லை. தாய் போன் எடுத்தாலும் தானே கதைத்து கிருத்திகா குசினிக்குள் அலுவலாக இருப்பதாகக் கூறி போனை வைத்து விடுவானாம். அப்படிப் பெருந்தன்மையில்லாதவனை ஏன் தன் தங்யையால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கிருத்திகாவின் தந்தையையும் சொந்த மாமனாக இருந்தாலும் ஆரம்பத்தி;ல் வரஅனுமதித்தாலும் தற்போது அவருக்கும் தடை போட்டாகிவிட்டது. கிருத்திகாவின் அம்மாவும் தம்பிமாரும் கூட லண்டன் வரமுடியவில்லை. அப்போது கூட சுந்தரேசன் குடும்பத்தை நான் பாடுபடுத்தினேனே அதனால் தான் என் மகளுக்கு இப்படி நடக்கிறது என்று கிருத்திகாவின் தந்தை உணரவில்லை. ;எந்த அளவுகளால் அளக்கிறீர்களோ அந்த அளவுகளினால் உங்களுக்கும் அளக்கப்படும்' என்று யேசுநாதர் கூறியது சுயநலவாதியான அவருக்கெங்கே புரியப்போகிறது.

தானும் விரும்பி ஏற்றுக்கொண்டதாலும் தன் மாமா அம்மா தெரிந்தால் கவலைப்படுவார்கள் என்பதாலும் ஊரில் உள்ள உறவினர் நண்பர்கள் பகிடி பண்ணுவார்கள் என்பதாலும் கிருத்திகா போன்றவர்கள் என்ன கஸ்டம் வந்தாலும் சகித்துக்கொள்வார்களே ஒளிய காட்டிக்கொடுக்கவோ வெளியே வரவோ விரும்பமாட்டார்கள்.
சொந்த மச்சானாக இருந்து கிருத்திகாவின் சீர்வரிசைகளையும் உழைப்பையும் உறிஞ்சும் நிரோஜன் போன்றவர்கள் தன் மனைவியை சாதாரண பெண்ணாகவே நடாத்தாத போது பெண் விடுதலை பேசுபவர்களும் பெண்ணியம் பற்றி மேடையில் முழக்குபவர்களும் கிருத்திகா போன்றவர்களை எப்படிக் காப்பாற்றப்போகிறார்கள்?? பாரதிராஜாவின் கறுத்தம்மாவில் ஆவது சிசு பிறந்தபின் கள்ளிப்பால் கொடுத்து வேறு ஒருவர் மூலம் கொல்லப்பட்டது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சியினால் நிரோஜன் போன்ற தந்தையே உலகுக்கு தெரியாமல் கருவில் பெண் என்பதையறிந்து கருச்சிதைவு செய்தால்??? ......

(யாவும் சிந்தனைக்கு....)

சாமத்திய வீடு



காலைக்குளிர் சில்லென்று வீசினாலும் தொலைபேசியின் தொணதொணப்பில் எரிச்சல் வந்தது. தொணதொணப்பு ஓய்ந்தது..
அன்று என்றும் இல்லாத களைப்புடன் படுத்திருந்தாள் சிந்து. அவள் கணவன் சபாவின் குறட்டை ஒலியில் இருந்து அவன் அயர்ந்து தூங்குவது தெரிந்தது. பாவம் அவன் லண்டன் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து இரவு வேலையே செய்து வந்ததால் இவ்வாறான ஒரு சில இரவுகளே அவனால் இரவு நித்திரை கொள்ள முடிந்தது. சபா மட்டுமா? இவனைப்போல புலம்பெயர்ந்த தமிழர் பலரின் நிலை இப்படித்தானே!!..

மீண்டும் ஒலித்தது....
புறுபுறுத்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து- கூந்தலைக் கைகளால் வாரி முடிந்தபடி தொலைபேசிக்குக் கிட்டப்போனாள் சிந்து. வசீகரம் அவள் முகத்தில் தெரிந்தது. என்ன இருந்தாலும் இலவசத் தொலைபேசிகள் வந்ததால் ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒருவிதத்தில் எரிச்சல் தான்.

தொலைபேசியைக் கையில் எடுத்தாள்... மறுமுனையில் வனஜா...
'துவங்கிவிட்டாள்.... அது இருக்கா... இது இருக்கா...எண்டு நேற்று முழுக்கக் கேட்டு....' மனதுக்குள் சபாவின் நித்திரை குழம்பி விடுமே என்ற ஆதங்கத்துடன்..

'அக்கா நாளைக்கு மட்டும் நாலைந்து பேர் உங்கடை வீட்டை படுக்க விட வேண்டும். எல்லாம் சுவிஸ்கார உறவினர்தான். பெரிய உதவியாய் இருக்கும். எங்கடை வீடு நிறைந்து விட்டது.... அதோடையக்கா அண்ணையிட்டைச் சொல்லி கொட்டலில் இரு குடும்பத்திற்கும் றூம் புக் பண்ண வேண்டும். பிரான்ஸ் கார உறவினர்கள் வந்து கொண்டிருக்கினமாம். எல்லாம் முடியுமட்டு; தலைவெடிக்குது....'

'எதற்கும் அவரோடை கதைத்து விட்டு கொஞ்ச நேரத்தாலை நான் எடுக்கிறன். சாமத்திய வீட்டிற்கான மற்ற அலுவல்களைக் கவனியுங்கோ....'தொலைபேசியை வைத்துவிட்டு ஹீட்டரைப் போட்டாள் சிந்து.

வனஜா நல்லவள் தான். ஆனாலும் பெரிய எடுப்புக்காரி. அவள் கணவன் சந்திரன் பல ஏஜன்ட் இடம் காசுகளைக் கொடுத்து ஏமாந்த பின் சிரமத்தின் மத்தியில் லண்டன் தனிய வந்து கடன் குறைத்த பின்னர் வனஜாவையும் இருபிள்ளைகளையும் ஏஜன்ட் மூலம் எடுப்பித்தான்.... இன்னமும் விசா கிடைக்கவில்லை.

வந்த காலம் தொடக்கம் பெனிபிட் எடுத்தபடி களவாக இரு இடங்களில் சந்திரன் வேலைக்கும் செல்லுகின்றான். ஒரு பிள்ளை இங்கு பிறந்தால் பெனிபிட் பணமும் கூடக் கிடைக்கும், விசாவும் கிடைக்கும், கையெழுத்து வைக்கப்போகும் போதும் பிடித்து அனுப்பமாட்டார்கள், என்று வழக்கறிஞர் கூறியதால் மூன்றாவது பிள்ளையையும் இங்கு பெத்தனர். இருந்தும் விசா கிடைக்கவில்லை.

வனஜா காசு சேர்ப்பதில்கெட்டிக்காரி. பெனிபிட் காசு, கணவனின் சம்பளப்பணம் எல்லாவற்றிலும் மிச்சம் பிடித்து தானே சீட்டுப்பிடித்து தன் சேமிப்பைப் பெருக்கிக் கொண்டாள். மாமனாரையும் ஏஜனட் மூலம் எடுப்பித்தாள். வீட்டுக்குக் காவலும் ஆயிற்று. வயது முதிர்ந்தவருக்கு பெனிபிட் கூடக் கிடைக்கும் என்பதால் மாமனார் வந்தது காசுமாயிற்று.

அதுவும் திருப்தியளிக்காமல் 'சிங்கிள் மதர்' திட்டம் அதாவது கணவனைப் பிரிந்து வாழ்தல் என்னும் திட்டத்தில் தன்னையும் இனைத்துக்கொண்டாள். சந்திரன் தன்னைக் கைவிட்டுச் சென்றதாகக் கூறி அதற்குப் பொய் ஆதாரங்களைக்காட்டி அதிகளவு பெனிபிட் பணம் பெற்றுக்கொண்டனர். புலம் பெயர்ந்த நாடுகளில் வனஜா போன்ற பலர் இவ்வாறுதான் வாழ்க்கை நடத்துகின்றனர். இப்படியான சிலரால் தான் தமிழனின் கலை, கலாச்சாரம் என்ற சொற்களும் அர்த்தமற்றுப்போகின்றன. மனிதரை மட்டுமல்ல அரசாங்கத்தை ஏமாற்றினாலும் கடவுளை ஏமாற்றுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.

'பெனிபிட் ஒப்பீஸில் இருந்து ஆட்கள் வீட்டிற்று வந்துபார்க்கும் போது சந்திரன் வீட்டில் நின்றால் வனஜா என்ன கானா புனா என்றா?... சொல்லுவா?' என்று சபா கேட்டபோது சிந்து சிரித்துக்கொண்டாள். ஏனெனில் கனாபுனா என்பது அவனது பாசையில்... 'கள்ளப்புருசன்'.

சிந்து தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவள். அயலில் இருப்பவர்களுடன் அந்நியோன்யமாக வந்த இடத்தில் வாழவேண்டும் என நினைப்பதால் வனஜாவின் நட்பை விலக்கிக் கொள்ளாமல் சமாளித்து வந்தாள். ஒருவர் எத்தனை தீமை செய்தாலும் ஒருவர் எமக்குச்செய்த நன்மையை கருத்தில் கொண்டு தீமையை மறந்துவிடவேண்டும். கூடியவரை நேர்மையாக வாழவேண்டும். எம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்றிருப்பவள். இதே கருத்துக்களை சபாவும் உடையதால் இருவருக்கும் எல்லா விடயங்களிலும் ஒத்துப்போயிற்று.

அதேபோல் வனஜாவிற்கும் சந்திரனுக்கும் பணம் எப்படியாயினும் சேர்த்தால் சரி என்ற கொள்கை உடையதால் இருவருக்கும் ஒத்துப்போயிற்று. பெனிபிட் பணம,; களவாக வேலை செய்து வந்த பணம், சீட்டு பிடித்தபணம், என்றெல்லாப் பணமும் பெருக வங்கியில் குறிப்பிட்ட பணத்திற்கு மேல் வைத்திருந்தால் பெனிபிட் பணம் பெறமுடியாது என்பதால் எல்லாருடைய கழுத்து, கைவிரல்கள், மணிக்கட்டு, காது போன்றவற்றில் நிறை அதிகமான தங்க நகைகளாக மின்னின. ஊரில் இருக்கும் போது எவ்வளவு கஸ்டப்பட்டதையும் மறந்து தமது சிறுபிள்ளைக்குக் கூட 'நகை போடாட்டி மதிக்கமாட்டினம், ஏழை எண்டு சொல்லுவினம்' என்று கூறுமளவிற்கு மனதில் பதியவைத்துள்ளனர். 'காணாததைக் கண்டவர்கள் இப்படித்தான்.' சபா சிந்துவிடம் கூறிக்கொள்வதுண்டு.

வனஜா நகைக்கடை வைக்குமளவிற்கு நகைகளாகச் சேர்த்துவைத்தாலும் பணத்தைப் பெருக்கவும் அறிந்து அதனை நடைமுறைப்படுத்தினாள். அதாவது உறவினர், தெரிந்தவர்க்கெல்லாம் வேறு யாரோவிடம் வேண்டிக் கொடுப்பது போல் ஐந்துவட்டிக்குக் கடன் கொடுப்பது. ஐந்து வட்டிக்குக் கொடுத்தாலும் வட்டி சரியான நேரத்தில் கறப்பதிலும் அவளுக்கு நிகர் அவள்தான்.

இத்தனைக்கும் ஊரில் சைவப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை தான் படித்தவள். ஆனால் உலகத்து அனுபவங்கள் எல்லாம் அத்துப்படி. ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாவிடினும் ஆங்கிலம் தெரிந்தது போல் நடித்துக்கொள்வாள். பெனிபிட் , வீட்டுக்காசு, வங்கி அலுவல்கள், பிள்ளைகளின் பாடசாலை அலுவலகள் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடல் அவசியம் என்றால் ஆரம்பத்தில் சபா மூலமாகவும் இவகளின் கள்ள வேலைகளுக்கு சபா மறுத்துவிட தற்போது கெஞ்சிக் கூத்தாடி சிந்து மூலமும் தன் அலுவல்களை முடித்துக்கொள்வார்கள். எனவே அவர்கள் சபா, சிந்து குடும்பத்தவரோடு சுயநலத்துடன் கூடிய நட்பை வைத்துக்கொண்டனர்.

என்ன காசு, நகை சேர்த்தாலும் விசா கிடைக்காதது வனஜா குடும்பத்தவருக்கு பயத்துடன் கூடிய கவலையே. அதனால் அடிக்கடி சிந்துவிற்கு தொலைபேசியில் புலம்பிக்கொள்வாள்.

'அக்கா! விசா இல்லாதவையை பிடித்து அனுப்பப் போகினமாம். மத்தியானச் செய்தியிலை சொன்னதாம். நீங்கள் கேட்டனீங்களே? உங்களுக்கு விசா இருக்குத்தானே எங்களுக்கு தான் இந்தக்கண் கெட்ட கடவுள் கண்ணைத்திறக்குது இல்லை!...' தனக்குக் கஸ்டம் என்றால் கண்டபடி கடவுளைத் திட்டுவாள். செய்தி போறநேரத்தில் தான் அவர்கள் சினிமாப்படம் டிவிடியில் பார்ப்பதால் சிந்துவிடம் தான் செய்திச் சுருக்கம் கேட்பாள். மற்ற நேரங்களில் எல்லாம் சின்னத்திரைதான். ஓவ்வொரு சின்னத்திரையிலும் தானும் அந்தப் பாத்திரமாக மாறி பேசிப்பேசி சின்னத்திரை பார்க்கும் போது அவளைப்பார்க்கச் சிரிப்பாக இருக்கும்.

தற்போதைய அவளுடைய பிரச்சனை வயதுக்கு வந்த தன் ஒரே மகளான சத்தியாவின் சாமத்திய வீடு பெரிதாகச் செய்து முடிப்பது... அதுவும் அவளது ஒன்றுவிட்ட சகோதரியை விடப் பெரிதாகச்செய்து முடிப்பது தான் முக்கியம்... அவர்கள் பல வருடங்களாக இங்கிருந்து பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்றவர்கள்.
அவர்களுடன் தான் போட்டி... இதனால் தற்போது வனஜா கஸ்டப்படுத்துவது சிந்து, சபா குடும்பத்தவரைத்தான். தெலைபேசியிலும் சரி அலைக்கழிப்பதிலும் சரி. கொஞ்சம் இடம் கொடுத்தால் மிஞ்சிவாள் இந்த வனஜா....

சத்தியா வயசுக்கு வந்து பன்னிரன்டு நாட்களாக பாடசாலைக்கும் விடவில்லை. சத்தியாவின் வகுப்பாசிரியை ஒரு வெள்ளைக்கார பெண்மணி. 'அவவிடம் ஆலாத்தி கழிப்புக் கழித்தபின்தான் பாடசாலைக்கு அனுப்பமுடியும்' என்று கூறும்படி சிந்துவை வற்புறுத்தினால் வனஜா. அப்படியெல்லாம் சொன்னால் அவர்களுக்குப் புரியாது என்பதால் எமது தமிழ்க்கலாசாரத்தின்படி ஒரு வைபவம் முடித்தபின்பு அனுப்பிவைப்பதாக வனஜா சார்பாக ஆங்கிலத்தில் விளக்கினால் சிந்து. அதற்கு அந்த வகுப்பாசரியைக்கு கோபம் வந்துவிட்டது. 'இது கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரு இயற்கைச் சம்பவம். இதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அசிங்கப்படுத்தவேண்டும். உங்கள் நாட்டில் தானே உலகமே வியக்கும் வண்ணம் பெண்கள் பேராட்டத்திலும் ஆண்களுடன் சரிசமமாக இணைந்துள்ள போது நீங்கள் இப்படிச்செய்வது பெண் இனத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது.'

பரீட்சை வருவதால் பிள்ளைக்கு இப்படியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிப் பாடசாலைக்கு அனுப்பிவைக்கும் படி எச்சரித்தாள். சிந்துவுக்கு அவமானமாகப் போய்விட்டது... வனஜா காதில் விழுத்தியதாகத் தெரியவில்லை....

அவளுக்கு நாட்டுப்பற்றும் இல்லை. நாட்டுப்பிரச்சனை காரணமாக எம்மவர் சாப்பாடும் இல்லாமல் அங்கு கஸ்டப்படுவதும் கவலையில்லை. அவளது பிரச்சனை முதல் சாமத்திய வீடு...அடுத்தது விசா....

'அக்கா வெள்ளைக்காரிக்குத் தெரியுமே! எனக்கு ஒரு பெண்பிள்ளை தான் என்டு. அவளுக்கு சாமத்தியவீடு செய்துபார்க்காமல் நான் உயிரோடை இருந்து என்னத்திற்கு...? அதோடை நான் கொடுத்து வைத்த காசு, நகை எல்லாம் வாங்கவெல்லே வேணும்....' என்று அலுத்துக்கொண்டாள் வனஜா.

சிந்து எரிச்லுடன் மௌனமாய் இருந்தாள். வனஜா தொடந்தாள்.
'கழிப்புக் கழிக்காவிட்டால் 'பே' பிடித்தால் பின்பு நான் என்ன செய்ய?..' தான் சாமத்திவீடு செய்வது சரி என்பதை நியாயப்படுத்துவதில் தான் குறியாக இருந்தாள்...

'காசுப்பே' பிடித்தது உண்மையில் வனஜாவிற்குத்தான் என சிந்து மனதிற்குள் எண்ணியபடி வனஜாவோடு தொடர்ந்து பழகுவதில் கவனமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தாள்.

தான் நினைத்தது போல் ஆடம்பரமாக 'சாமத்தியவீடு' செய்து முடித்தாள் வனஜா...

மிகவும் பிரபல்யமான மண்டபம்,அழகான மணவறை, மண்டப அலங்காரம், விலை அதிகமும் 'ருசி' அதிகமுமான பலகாரம், மதியபோசனம், மிகப்பிந்திய நாகரீகத்தில் புடவை, தலைஅலங்கார நிபுனர்கள் மூலம் தேவலோகரம்பை போல் சத்தியா வெளிக்கிடுத்தி நகைக்கடைப்பொம்மை போல் நகைகளை அடுக்கி, டிஜிற்றல் வீடியோ, டிஜிற்றல் கமராவில் புகைப்படங்கள் என சாமாத்தியவீடு தடல் புடலாக முடிந்தது.

சாமத்தியவீடு நடந்தால் பொருட்களாகவும், சரீர உதவியாலும், மனதாலும் சங்கடப்பட்டது சிந்துவும் சபாவும் தான். சமத்தியவீட்டிற்கு முதல் நாள் இரவு சிந்து வீட்டு சாப்பாட்டறை தொடக்கம் வரவேற்பறை வரை வனஜாவின் உறவினர் தங்கினர். ஊரில் கிணற்றில் அள்ளிக் குளித்துவிட்டு வெளிக்கிடுவது போல் இலண்டனில் கடும்குளிரில் செய்ய முடியாது தானே?... சாதாரண நாட்களில் சுடுநீர்க்குளியல் முடித்து வெளிக்கிடுவது பெரும்பாடு...
சாமத்தியவீடு அன்று அவ்வளவு பேரும் குளித்து வெளிக்கிட்டு மண்டபம் போகவே போதும் என்றாகிவிட்டது.

அத்துடன் வனஜாவின் சாமத்தியவீட்டின் பின்பு சிந்துவுக்கும் சபாவிற்கும் இன்னொரு பயமும் தொற்றிக்கொண்டது. தங்களது எட்டுவயது மகளும் தனக்கும் இப்படிச் சாமத்திய வீடு செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால்....??

தொலைபேசி ஒலித்தது...

மறுமுனையில் வனஜா....

'அக்கா ஆயிரம்பேரை சாமத்தியவீட்டிற்கு எதிர்பார்த்தோம்....ஆனால் வந்தது ஜநூறுக்குக் கிட்டத்தான். அதனால் சாப்பாடுகளும் மிஞ்சிவிட்டது. காசும் நட்டமாகிவிட்டது.
ஆறாயிரம் பவுண்ஸ் வரையில் செலவாகியது. ஆனால் சேர்ந்தது காசு, நகையாக மூவாயிரம் பவுண்ஸ் வரைதான்...' தொடர்ந்து வராமல்விட்டவர்களுக்கும், தான் கூட கொடுத்து கொஞ்சம் போட்டுவிட்டுப்போனவர்களுக்கும் திட்டுவது தொடர்ந்தது..........?'

சிந்துவுக்கு வனஜாவும், சந்திரனும் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு நிற்பது போல் தெரிந்தது......

சிந்துவின் மகன் பழைய சாறி ஒன்றை பிழையாகத் தனக்குச் சுற்றிக்கொண்டு அப்பா இப்படித்தான் அக்காவின்ரை சாமத்தியவீட்டிற்கு அக்கா நடந்து வருவா என அன்ன நடை நடந்துகாட்டினான்...?

சபாவும் உண்மையாகவே தலையில் துவாய்த் துண்டைப் போட்டுக்கொண்டான்.....சிந்து விக்கித்து நின்றாள்.....


யாவும் சிந்தனைக்கு.....

முல்லை அமுதன்.